இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி..!!
ஸ்ரீலங்கா வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.4 ரூபாவாக பதிவாகியுள்ளார்.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கான எதிரான கேள்வியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்தது. இலங்கையை பொறுத்த வரை டொலருக்கு எதிரான ரூபா 200 ரூபாவுக்கு அதிகமான தொகைக்கு வீழ்ச்சியடைந்தது இதுவே முதல் தடவையாகும்.
முன்னரே டொலருக்கான கேள்வி அதிகரித்து செல்வதை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு எடுத்து வருவதற்கு இருந்த தடையை நீக்கியது. அதையடுத்து இலங்கையில் இருந்து வெளிநாட்டுகளில் முதலீடுகள் செய்யப்படுவதையும் இறக்குதிகளையும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றும் டொலருக்கான கேள்வி அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது