வங்கிக்கடன் பெற்றீர்களா? அப்போ இது உங்களுக்கான முக்கிய ஆலோசனை..! கவனமாக படியுங்கள்!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான தருணத்தில் வங்கியில், நிதி நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களுக்கான அறவீடுகளை வரும் 06 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒரு சில நிறுவனங்களால் கடன் அறவீடுகள் நடத்தப்பட்டதாக மக்களிடம் இருந்து புகார் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களுக்கு இதற்கான ஆலோசனையை இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான எச்.ஏ. கருணாரத்ன இன்று புதன்கிழமை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கிக்குச் சென்று கடன் பெற்றவர்கள், இந்த நிவாரணம் குறித்து தெரியப்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆலோசனை தெரிவித்தார்.