பொலநறுவையில் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்கார்கள்..!!! அங்கிருந்து தப்பி சென்ற மைத்திரி..!!
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பொலநறுவையில் உள்ள தனது வீட்டை ஆர்ப்பாட்டக்கார்கள் சுற்றி வளைத்தமையினால் அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறியுள்ளார். ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி இருந்தும் நியமிக்கப்படாதவர்களினால் தனது வீடு சுற்றிவளைக்கப்பட்டது என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தகுதியானவர்களுக்கு உரிய நியமனம் வழங்கப்படும், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என அவர்களிடம் நான் கூறினேன். இந்த சம்பவம் கடந்த வாரம் எனது வீட்டில் இடம்பெற்றது. கடும் துன்பங்களின் மத்தியில் அங்கிருந்து சென்றதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தனக்கு நடந்த துன்பங்களை தெரிவித்துள்ளார்.