ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்…!! பிரதமரின் திடீர் தீர்மானம்,,!!
இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் இறுதித் தீர்மானம் கட்சியின் செயற்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸு மாரசிங்ஹ கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை நிறைவு செய்துள்ளார். கட்சியை நல்ல முறையில் வெற்றிபெறச் செய்யக்கூடிய வேட்பாளர் ஒருவர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாம் சுமுகமாக பேசினோம். கூடிய வேட்பாளராக வெளியிடக்கூடிய நிலையில் இருக்கும், சனி, ஞாயிறு தினம் அளவில் தீர்வு ஒன்றை பெற முடியும் என நான் நம்புகிறோம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதை அடுத்து எல்லோரும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியை எவ்வாறு வெல்ல வைப்பது என கலந்துரையாடல். கட்சியைப் பலப்படுத்தி, பின்னர் வேட்பாளரை முடிவு செய்வோம் எனத் தீர்மானித்தோம்.
மேலும் இது குடும்பத்தின் பிரச்சினைஇல்லை மாறாக தற்போது இருக்கும் நிலை குடும்பப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி என்பது தொழிலாளியை ஜனாதிபதியாக்கிய கட்சி. ஒரு விவசாயியை ஜனாதிபதி பீடத்தில் அமர வைத்த கட்சி. இறுதி தீர்மானம் வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளனர்.