இலங்கையில் உயர்தர மாணவர்களுக்காக டெப் கணிணி வழங்கும் புதிய திட்டம்..!
இலங்கையில் உயர்தர மாணவர்களின் நன்மையை கருத்தில் கொண்டு இலவச டெப் கணிணி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம். இத் திட்டமானது குறுகிய நோக்கத்துடன் பார்க்கும் விடயமல்ல. இந்த திட்டம் வெறுமனே உபகரணம் வழங்கும் திட்டம் மட்டும்மன்றி அதனையும் தொடர்ந்து வருங்காலத்துக்கு ஏற்ற தேசிய செயற்திட்டமாகும்.
டெப் கனணி கொடுக்கும் திட்டத்தினால் ஸ்ரீலங்காவின் சிறுவர் தலைமுறையை உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் சிறுவர்களுக்கு சமனாக இருப்பதை பிடிக்காத ஒரு சிலரே இவ்வாறு விமர்சிக்கின்றனர் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு கல்வி திறன்களை எதிர்கால சந்ததியினர் பெற்றுக்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். தொழில்நுட்ப அறிவை உயர்தர மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் டெப் கணிணி உதவுகின்றது. இத் திட்டத்தை பற்றி எதிர்ப்பு கூறுபவர் மற்றும் விமர்சிப்பவர் பற்றி எந்த கவலை அடைய வேண்டியதில்லை.என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டமானது தேசிய செயற்திட்டமாகும்.திட்டமானது தொழில்நுட்பத்தை உபயோகித்து கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை செயற்படுத்துவதாகும். இலங்கை சிறுவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாகும். உலக அபிவிருத்தி அடைந்த நாடுகளின் சிறுவர்களுக்கு சமமாக எமது சிறுவர்களும் வளர்ச்சி அடைந்து வருவது எமக்கு விருப்பம் என்றும் அவர் கூறினார்.