கல்முனையில் வெடிக்கும் பூகம்பத்தின் மத்தியில் அரசியல் தலைமைகள்..!!
வடக்கின் அரசியல் தலைமைகள் கிழக்கு கல்முனை போராட்டக்காரர்களை சந்தித்து தங்களது ஆதரவை கூறியுள்ளனர். கல்முனையில் 06 ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா, வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன், ரெலோ தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துக்களை கூறியுள்ளனர்.
அரசாங்கம் வழங்கும் ஒட்டுமொத்த ஆதரவில் இருந்து தமிழ் தரப்பினர் விலகிக் கொள்ளவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா என்று கூறினார்.மேலும் நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகம் நாட்டில் இல்லை என்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த இடையில் நிக்கின்றனர்.என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஒரு நாள் இரவில் பல சபைகள் பற்றி முடிவெடுக்க முடியும் என்றால் கல்முனை வடக்கு பிரதேச செயலம் தரமுயர்த்த பற்றி ஏன் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியாது என ரெலோ தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.