இன்று முதல் உலக போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்..!!!
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு இணையாக இன்று முதல் ஒருவார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.வருகின்ற 26 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு இணையாக நாட்டில் பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் நடைபெறுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கைக்குள் நடைமுறை படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் அதிகரிப்பது மற்றும் சகல பிரஜைகளையும் அதற்காக ஒன்றுசேர வைப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நடக்கும் கொள்கை, சட்டமுறைமை மற்றும் புனருத்தாபனம் இது போன்றவற்றின் ஊடாக நாடளாவிய ரீதியாக பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படவுள்ளன.
9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் போதையிலிருந்து முற்றாக விடுதலை அடைவது குறித்து தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெளிப்படுத்துதல், புனருத்தாபனத்தின் பின் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் தொடர்பான பின்னணி அறிக்கை பற்றிய பல செயற்திட்டங்கள் இதில் அடங்கும்.