ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி விடுத்த முக்கிய அறிவிப்பு..!!
இலங்கையின் புலனாய்வு தகவல்களை பெற்று கொள்வதற்காக இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.மாதுருஒயா இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரத்தை நடைமுறை படுத்தும் வகையில் இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும், எந்தவொரு நாட்டிலும் மக்களின் சுதந்திரம் சீர்குலையும் வகையில் எந்தவித
பிரச்சனையும் இடம்பெறாது என உறுதிப்படுத்தவோ உத்தரவாதமளிக்கவோ முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த செயற்பாட்டுடன் சம்மந்தமான வலையமைப்பை இனங்கண்டுள்ளது.விஷேடமாக இந்தியாவுடன், புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து ஒன்று இணைந்து செயற்படுகின்றோம்.இன்றைய காலத்தில் பயங்கரவாதத்தை எதிர்நோக்கி வருகின்றோம். மேலும் இதன் காரணமாக நாடுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கிடையே உறவுகள் இடம்பெற வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.