எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயார்! ராஜித சேனாரத்ன பகிரங்க அறிவிப்பு..!!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்குத் நான் தயாராக இருக்கிறேன் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பிரபலமான பௌத்த பிக்கு ஒருவர், என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார்.எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து கட்சி முடிவு செய்து எனக்கு வேட்புமனுவை கொடுத்தால் நான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கிறேன். எனக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டால், தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று, எனக்குத் தெரியும். இந்த நிலையில் இரு தரப்புகளின் வாக்குகளை என்னால் பெற்றுக்கொள்ள முடியும்.
கடற்றொழில் அமைச்சையும், போன்று நாட்டை நல்ல முறையில் மேற்கொள்வேன் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.