இலங்கை அதிபரை இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் நேரில் சந்திப்பு…!!
இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை இலங்கை அதிபர் மைத்தரிபால சிறிசேனவை நேரில் சந்தித்தார்கள். மேலும் இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, குவைட், கட்டார், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, துருக்கி, மலேசியா, பலஸ்தீன், பங்களாதேஷ், மாலைதீவு, ஈராக், லிபியா, ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.
இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை அதிபர் தேர்தல்களை இலக்கு வைத்து இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற ரீதியில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த நாடுகள் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்காக அந்த நாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி நன்றியையும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக எந்த நேரமும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குமாறும், சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு விடுத்துள்ள தடைகளை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எந்த நிலையிலும் பயங்கரவாதத்தை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம் என்று இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்ற அனைத்து வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குறிப்பிட்டுள்ளார்.