இணைய வசதியை இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்..!!
இலங்கை மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு ரயிலில் பயணம் செல்வோருக்கு இலவச Wi-Fi வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதல்தர இணைய வசதிகளை வழங்கும் தொலைபேசி நிறுவனங்கள் சேர்ந்து 53 ரயில் சேவைகளில் 83 Wi-Fi வலையமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து ரயில் சேவைகளுக்கு முழுமையான Wi-Fi வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டவுள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே நிறைய இந்த Wi-Fi வலையமைப்புகள் காணப்படுகின்றன.எதிர்வரும் நாட்களில் எல்லா மாவட்டங்களிலும் பிரதிநித்துவம் செய்யும் வகையில் இந்த Wi-Fi வலையமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தினால் உருவாக்கப்பட்டு வருகின்றது.