இலங்கை கிரிக்கெட் சபை அளித்த உத்தரவாதத்தின் பின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பங்களாதேஷ் அணி..!!!
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலின் பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் அணியாக பங்களாதேஷ் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. மேலும் பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இன்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு ந்டைபெற்றப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்க்கு பங்களாதேஷ் அணி மறுத்தது. இதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அவர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து இந்த முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுற்றுப்பயணத்திற்கு அவர்கள் வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எங்கள் பாதுகாப்புக் குழுவில் இருந்து சாதகமான முடிவுகளைப் பெற்ற பின்னர், இலங்கை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தோம்” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டி மூன்று நாட்ட்களாக ஜூலை 26, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடருக்காக பங்களாதேஷ் அணி எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றது.
அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. .