தமிழ் மக்களுக்கு சம உரிமையை பெற்றுக்கொடுப்பேன் என மஹிந்த தெரிவிப்பு..!!!
ஸ்ரீலங்காவில் சுதந்திரம், சமத்துவம், சமாதானம் போன்ற அனைத்தும் நிறைந்த நாடாக உருவாக்கப்பட வேண்டும், அதே போன்று அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும், தமிழ் மக்கள் இழந்த அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளோடு வாழம் நிலை உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
!Advert!
நான் தமிழ் தலைவர்களை போல இல்லை செய்வதை தான் சொல்வேன், சொல்வதைத்தான் செய்வேன் என அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்துகொண்டு போதே அவர் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து தமிழில் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சியை நிலைநாட்டியது. அந்த ஆட்சியின் பின்னர் அனைத்து விடயங்களிலும் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது.
!Advert!
இந்த நிலையில் மீண்டும் நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நாங்கள் மீண்டும் பொறுப்பெடுக்கப்போவது 2015ஆம் ஆண்டு நாம் அவர்களிடம் ஒப்படைத்த நாட்டை அல்ல, 2005ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்த போது நாடு எப்படி இருந்ததோ அப்படியான ஒரு நாட்டை எங்களால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
!Advert!
2005ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்த போது முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. புகையிரதங்களில் சுதந்திரமாக கொழும்பிற்கு வரமுடியும் என வடக்கு மக்கள் யாரும் நினைக்கவில்லையே, அதோடு கொழும்பு உட்பட பல இடங்களில் அபிவிருத்தி செய்ய முடியும் என்று டக்ளஸ் தேவானந்தா மட்டும் தான் ஆணித்தனமாக நம்பினார். ஆனால் வேறு யாரும் நம்பவில்லை.என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்தையும் எங்களால் செய்ய முடிந்தது. அதேபோன்று எதிர்காலத்திலும் எங்களால் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.