தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட திடீர் சந்திப்பு….!!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.
மேலும் இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அந்த சந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.