யாழ்ப்பாணத்தில் திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்…!!!
யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்துள்ளனர். வல்லிபுர பரியார் வீதியில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து கொண்ட நிலையில், ஹையேஸ் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் எரிந்துள்ளது. அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் பேருந்து முழுமையாக எரிந்துள்ளது.