நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் விசேட அறிவிப்பு….!!!
சர்ச்சைக்குரிய ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பில் இன்றைய தினம் விசேட அறிவிப்பு வெளியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கிரான் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பில் வைத்து இது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்த பல்கலைகழகம் தொடர்பான ஒருநாள் விவாதம் இடம்பெற்றது. குறித்த பல்கலைகழகத்தின் உண்மை நிலவரத்தை எந்தவொரு உறுப்பினரும் வெளியிடவில்லை என அவர் கூறினார்.
இந்த பல்கழைகத்திலிருந்து முழு தென்னாசியாவிற்கு தேவையான குண்டுதாரிகள் உருவாகி வருகின்றனர் . இந்த பல்கலைகழகத்திற்கு சவூதி அரேபியாவில் உள்ள செல்வந்தர்களே நிதியுதவி வழங்கியுள்ளனர். அவர்களே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றி நாசமாகியுள்ளனர். பாகிஸ்தானுக்கும் அதே போன்ற நிலவரம். இலங்கையிலும் அதே போன்ற செயற்பாட்டையே அவர்கள் நடத்திவருகின்றனர்.
மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் சட்டவிரோத தன்மை தொடர்பில் தகவல் வெளியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.