தற்போது வரை இலங்கையில் பதிவாகி உள்ள கொரோனா நோயாளிகளின் முழு விபரம். ! திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன.?
கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப் படுத்திவிட்டதாக அறிவித்த பல நாடுகளில் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது கொரோனா. மருந்து கண்டுபிடிக்கும் வரை இதனை அழிக்க முடியாது என ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து வருகிறது.
இருப்பினும் அனைத்து நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களில் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இது வரை கொரோனா வைரஸால் பாகிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2010 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1602 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
அத்துடன் இது வரை இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11ல் உள்ளது. இலங்கையில் அதிகரிக்கும் நோயாளிகள் வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் என சுகாதார துறை அறிவித்துள்ளதுடன் இருப்பினும் கடல் வழியாக கள்ளத்தனமாக வருபவர்களால் இலங்கைக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளனர்..!!