விமான நிலையப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று விமான நிலையச் செயற்பாடுகளைக் கண்காணித்ததுடன், பயணிகளுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நாட்டுக்கு வரும் – போகும் பயணிகள், விமான நிலையத்தில் காலதாமதமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கிய ஜனாதிபதி கோட்டா, அங்கு வந்த பயணிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
விமானநிலையத்தில் நின்ற உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணிகள் ஜனாதிபதியைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சென்று கலந்துரையாடியதையும் காணக்கூடியதாக இருந்தது.