இலங்கையில் வேகமாக அதிகரித்துள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! ஆபத்தில் இலங்கை..!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருக்கி உள்ள நிலையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி உள்ளது. பல நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இன்றைய தினம் அடையாளம் காணப் பட்ட கொரோனா நோயாளிகளுடன் சேர்த்து இது வரை பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இருப்பினும் தற்போது அதிகரிக்கும் நோயாளிகள் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என கூறப் படுகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் முற்றாக ஒழித்து விட்டதாக சில நாட்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. ஆனால் இன்றைய தினம் வைத்தியர் அனில் ஜெயசிங்க கருத்து வெளியிடுகையில் இலங்கை மீண்டும் ஆபத்தான கட்டத்தை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின் பற்றாமல் நடந்துகொள்வது தான் என தெரிவித்துள்ளார்.
பஸ்களில் நெருக்கமாக செல்வது, மாஸ்க் இன்றி பயணிப்பது, பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடுவது என அத்துமீறுகின்றனர். எதிர் வரும் காலம் இலங்கைக்கு ஆபத்தான காலம் என அனில் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையின் ஜனாதிபதி அவர்களும் இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது..!!