கொரோனா வைரஸினால் ஆபத்தை நோக்கி நகரும் இலங்கை..! வைத்தியர்கள் எச்சரிக்கை…!!
ஆபத்தை நோக்கி இலங்கை நகர்வதாக இலங்கை வைத்தியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன்றைய நாளில் மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிதுள்ளது. 2 பேர் மரணமடைந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த பலர் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாத நிலையில் தலைமறைவாகி உள்ளனர். இதனால் நாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. அத்துடன் மக்களில் சிலர் தங்களுக்கு கொரொனா அறிகுறிகள் இருக்கு என தெரிந்தும் கண்டுகொள்ளாமல் கிராமம் முழுவதும் சுற்றி வருதால் தற்போது வரை இலங்கையில் பல இடங்கள் முழுமையாக முடக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் இரண்டு வாரங்களுக்கு கொரோனா வைரஸினால் பலர் பாதிக்கப் படலாம் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே சந்தேகத்தின் பெயரில் தனிமை படுத்தப் பட்டவர்களிலும் கொரோனா பாதிப்புக்குள்ளானர்கள் இருக்கலாம் என்றும் கூறப் படுகின்றது.
இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். கொரொனா வைரஸின் தாக்கம் இந்த இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் என எதிர் பார்ப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். அரசின் உத்தரவை மீறி மக்கள் நடந்துகொண்டால் இலங்கையை ஆபத்தில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்…!!