இலங்கையில் வேகமாக அரிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! இயல்பு வாழ்க்கையில் மக்கள்..!!
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை மக்கள் அன்றாட பணிகளில் வழமை போல் ஈடுபட்டு வருகின்றனர். அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப் பட்டுள்ள நிலையில் பள்ளிகள் ஜூலை மாதம் முதல் திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கையில் இலங்கை மக்கள் இருந்தாலும் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வது தான். தற்போது வரை இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1946 ஆக பதிவாகி உள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1421 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்றைய தினம் 22 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப் பட்டனர். இது குறித்து வைத்தியர் அனில் ஜயசிங்க கருத்து வெளியிடுகையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் கட்டுப் படுத்தப் பட்டு விட்டது என்றும் தற்போது அடையாளம் காணப் படும் நோயாளிகள்,
பணிக்காக வெளி நாடு சென்று திரும்புபவர்கள் என்வும் தெரிவிவித்துள்ளார். எனினும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்..!!