“உடல் முழுவதும் தொட்டு தடவி விட்டு வாய்ப்பில்லை என்பார்கள்” பாலியல் தொல்லை சினிமாவில் எப்படி தொடங்குகிறது.? உண்மையை உடைத்தை சர்ச்சை நடிகை.!!
நடிக்க வரும் நடிகைகளை தொட்டு தடவி, எல்லா இடங்களையும் பிடித்த பின் வேண்டாம் என reject செய்து விடுவார்கள், இது தான் பெண்களுக்கு முதல் முதல் ஆரம்பமாகும் பாலியல் தொல்லை என சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டிருக்கும் சகிலா பற்றி பேசிய நடிகை ஸ்ரீ ரெட்டி சகிலா அவர்கள் வாழ் நாளில் தான் ஒரு தவறான திரைப்பட நடிகையாக வருவேன் என நினைத்திருக்க மாட்டார். அவரது குடும்ப சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இயக்குனர்கள் அவரை அப்படியே மாற்றிவிட்டார்கள்.
பாவம் தற்போது சகிலா அவர்களின் நிலையை பார்க்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது. சகிலா மட்டும் அல்ல அவரை போல் என்னை போல் பல நடிகைகள் இன்று மாறுவதற்கு காரணம் இயக்குனர்களே. திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி நடிப்பு திறமையை பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள்.
நாமும் போய் நடித்து காட்டினால் வயிறு மார்பு என நடிப்பு சொல்லித் தருவது போல் தொட்டு தடவுவார்கள், தடவு முடிந்ததும் reject என்று விடுவார்கள், பின்பு கால் செய்து என்னை அட்ஜெஸ்ட் செய்தால் நடிக்கலாம் என்பார்கள், இது தான் தற்போதும், அப்போதும் இருந்தது என கூறியுள்ளார்