இந்த மாதம் 13ம் திகதி திருமண பந்தத்தில் இணைய இருந்த அப்பாவி பெண்ணின் கொடூர மரணம்.! சோகத்தில் துடிக்கும் உறவினர்கள்.!!
13ம் திகதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் 21 வயதான இளம்பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு முதியோர்களுக்கே அதிகம் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது இளைஞர்களையும் வேகமாக தாக்கி வருகிறது.
கடந்த சில வாரங்களில் முதியோர்களின் மரணத்தை விட 40 வயதிற்கு குறைந்தோரின் மரணம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் இள வயதினரின் மரணம் அதிகரித்துள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த ஸ்ரீவாணிக்கு திடீரென உடல் வலியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ மனை அழைத்துச் சென்ற போது ஸ்ரீவாணிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டது. கடந்த 6 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த ஸ்ரீவாணி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
இந்த மாதம் 13ம் திகதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்த நிலையில் இவரது மரணம் குடும்பத்தினரை மிகவும் பாதித்துள்ளது.!!