பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின் சனம்ஷெட்டி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.! சனம் ஷெட்டியை இனி இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாமாம்.!!
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களில் ரசிகர்களின் நாயகியாக வலம் வந்தவர் சனம்ஷெட்டி. வீட்டிற்குள் சென்றதும் சனம் ஷெட்டி நடிப்பதாக கூறப்பட்ட போதும் பின் அதில் இருந்து மாறுபட்டார். மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிய சனம்ஷெட்டி யாருடனும் இணைந்து செயற்படாமல் தனியாக இருந்தார்.
ஆரி மற்றும் அனிதாவுடன் மட்டும் சண்டை போடாத சனம் இறுதியில் ஆரியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ரசிகர்களால் வெளியேற்றப் பட்டார். சனம் வெளியேற்றப் பட்டதும் கடுப்பான ரசிகர்கள் சனம் ஷெட்டி இல்லாவிட்டால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம் என கூறினார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க சனம் ஷெட்டி நடித்து வருகின்றார். இந்த நிலையில் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சனம் ஷெட்டியிடம் ரசிகர்கள் சில கேள்விகளை கேட்டுள்ளனர். அதில் உங்களை மீண்டும் தொலைகாட்சியில் காண வேண்டும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்களா என கேட்டுள்ளனர்.
இதற்கு ,”Why Not” ஏன் இல்லை, கண்டிப்பாக கலந்து கொள்வேன் என பதில் அளித்துள்ளார். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி கலந்துகொள்ளப் போகிறார் என கூறப்பட்டு வரும் நிலையில் சனம் செட்டி இதனை கூற அப்படியானால் குக் வித் கோமாளி சீசன் 3ல் சனம் ஷெட்டியை காணலாம் என கூறப்படுகின்றது.!