சுஜித்தை மீட்பதில் நடந்த இறுதி முயற்சியும் இடை நிறுத்தம்..! கதறி துடிக்கும் உறவுகள்..!!
கடந்த 46 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றிற்குள் போராடிக் கொண்டிருக்கும் குழந்தை சுஜித் இப்போது என்ன மாதிரியான நிலையில் இருக்கிறது என்பதை யாராலும் இன்னும் தெரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. நேற்றைக்கு முந்தினம் குழிக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை 46 மணி நேரம் கடந்த நிலையிலும் இன்னும் மீட்க முடியவில்லை சிலர் குழந்தை மயக்க நிலையில் என்றும் சிலர் குழந்தை உயிருடன் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
குழந்தை உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் வெறும் 10% வீதம் மாத்திரமே உள்ள நிலையில் இறுதி முயற்சியாக சுரங்கம் தோண்டப் பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அதுவும் இடை நிறுத்தப் பட்டுள்ளது. நிலத்தில் பாறைகள் இருப்பதால் அதனை உடைத்துக் கொண்டிருந்த ரிக் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இறுதி முயற்சி இடை நிறுத்தப் பட்டுள்ளது.
தற்போது இது வரை குழி தோண்டிக் கொண்டிருந்த இயத்திரத்தை இடத்தில் இருந்து அகற்றி விட்டு மற்றுமொரு ரிக் இயந்திரம் வரும் வரை காத்திருக்கின்றனர். இதில் இருந்து ஒரு விடயம் நன்றாக தெரிகிறது.. நிச்சயம் குழந்தையை உயிருடன் மீட்கும் எண்ணம் எவருக்கும் வரவில்லை. இந்தியாவில் அதிக நேரம் ஆழ்துளை கிணற்றில் உயிருடன் இருந்த குழந்த மார்ச் மாதம் மீட்கப் பட்ட 18 மாத குழந்தையாகும்.
48 மணி நேரங்கள் குழந்தை உள்ளே இருந்தது. இருப்பினும் அந்த குழந்தையின் சுவாசம், இருந்துகொண்டே இருந்தது. ஆனால் சுஜித்தின் மூச்சுவிடும் சத்தம் நின்று முழுமையாக ஒரு நாள் ஆகிவிட்டது. அத்துடன் ஆக்சிஜன் கிடைகிறதா என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் இன்னும் சில மணி நேரங்கள் செல்லும் என்பது மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துள்ளது…!!