எல்லோரும் சுஜித்திற்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது .. செரின் சாக்ஷியுடன் தீபாவளி கொண்டாடிய சேரன்..! வெளியாகி உள்ள புகைப்படத்தால் கடுப்பில் ரசிகர்கள்..
கடந்த 25ம் திகதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்காக இந்தியா மட்டும் இன்றி உலகமெங்கும் உள்ள மக்கள் மொழி இனம் மதத்தை தாண்டி பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். இதற்கான பலர் தங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை நிறுத்தினார்கள்.
மணற்பாறை பகுதியை சுற்றி இருந்த 8 கிராம மக்கள் ஒரு வெடி கூட தங்கள் ஊரில் வெடிக்கவில்லை, ஒருவர் கூட புத்தாடை அணியவில்லை, குழந்தை உயிருடன் வரவேண்டும் என்பதற்காக மக்கள் மண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால் சிலர் தீபாவளியை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒரு பக்கம் சுஜித்திற்காக உருகுவது போல் நடித்துக் கொண்டு இன்னுமொரு பக்கம் கொண்டாட்டம் என இருக்கின்றனர். அதிலும் மக்களால் அதிகம் மதிக்கப் பட்ட சேரன், தேவதை என புகழப் பட்ட செரின், போன்றோர் தீபாவளி கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் தீபாவளி கொண்டாடுவது தவறில்லை.. ஆனால் அதை மற்றவர்களுக்கு காட்டி வெறுப்பேற்ற கூடாது கூடாது. மதிப்புக்குறியவர்கள் இப்படி செய்வது கவலையை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்..!!