“இந்தியாவின் பிரதமரே வந்தாலும் இதை தான் செய்வேன், என் கடமை இது ” மந்திரியின் மகனிடம் அதிரடி காட்டிய இளம் பொலீஸ் கான்ஸ்டபிளுக்கு நடந்த கொடுமை..! வைரலாகும் வீடியோ…!!
இந்தியாவின் பிரதமர் வந்தால் கூட இதை தான் செய்வேன் இது என் கடமை என இளம் பெண் கான்ஸ்டபிள் கர்ஜித்த விவகாரம் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. நோய் பரவல் காரணமாக இந்தியா இன்னும் லாக் டவுணில் உள்ளது. பல இடங்களில் பொலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில் குஜராத்தின் சூரத் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுனதா யாதவ் கடந்த புதன்கிழமை மங்கத் செளக் பகுதியில் வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதன் போது மாஸ்க் அல்லது வேறு எந்த பாதுகாப்பும் இன்றி 5 பேர் கொண்ட குழு ஒன்று வந்துள்ளது. இவர்களை செல்ல அனுமதிக்காத சுனதா, ஊரடங்கு சட்ட நேரத்தில் எங்கே செல்கின்றீர்கள் , செல்ல அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார். ஆனால் சுனாவின் பேச்சை கேட்காத அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் சுகாதார துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானிக்கு போன் செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு தந்தையின் வாகனத்தில் வந்த பிரகாஷ் சுதாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் நான் சுகாதார துறை அமைச்சரின் மகன் என திமிராக பேசிய போது..” பிரதமராக இருந்தால் கூட இதை தான் செய்வேன் இது என் கடமை என கூறியுள்ளார். இருப்பினும் காவல் நிலையத்தில் இருந்து கால் வந்ததுடன் அவ்விடத்தை விட்டு வெளியே செல்லும் படி சுனதாவிற்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து சுனதா தலைமை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளார். கடமையை செய்ததற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்காமல் தனக்கு கொடுக்கப் பட்டதால் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார் சுனதா. இந்த நிலையில் சுனதாவின் கடமைக்கு இடையூறு செய்தார்கள் என்ற புகாரில் பிரகாஷுன் நண்பர்கள் கைது செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளார்கள்..!!
#Gujarat. This video has gone viral showing heated arguments between a woman constable Sunita Yadav & son of BJP minister of state for health in Surat over breaking of night curfew rules. Yadav has resigned today apparantly in frustration as her seniors did nothing @DeccanHerald pic.twitter.com/jrieEPgmOm
— satish jha. (@satishjha) July 11, 2020