இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கேவலம்.! இப்படி என்னை அவமானப் படுத்தி விட்டார்களே.!! கோபமாய் பதிவிட்ட சுரேஷ் சக்ரவர்த்தி! பிரபல தொலைகாட்சியின் சூழ்ச்சி.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 103 நாட்களை கடந்துவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அத்தனை போட்டியாளர்களும் மீண்டும் வீட்டிற்குள் வந்து விட்டார்கள். ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் இன்னும் வீட்டிற்குள் வரவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த போது வயதானவர் இவரால் என்ன முடியும் என நினைத்த போது அனைத்து போட்டியாளர்களையும் ஓரங்கட்டி அத்தனை டாஸ்குகளிலும் தன்னை இளைஞனாகவே வெளிப்படுத்தி வெற்றி பெற்றார்.
மூன்றாம் வாரம் இடம்பெற்ற கேப்டன்சி டாஸ்கின் போது பாலாஜி ரியோவையும், ஆரி வேல்முருகனையும் சுமந்துகொண்டனர். கேப்ரியலாவை சுமக்க ஒருவரும் இல்லாத போது தனி ஒருவராக கேப்ரியலாவை சுமந்து அசத்தினார். அது மட்டும் இன்றி பல டாஸ்குகளில் அவரே வெற்றியும் பெற்றார். நாமினேஷனில் வந்து வாக்குகள் பெற்றிருந்த போதும் வெளியேற்றப் பட்டார்.
அதன் பின் சுரேஷ் சக்ரவர்த்தியை தொலைகாட்சி மதிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ள் நிலையில் சுரேஷை மட்டும் அழைக்கவில்லையாம். இதனை பல முறை கூறிய சுரேஷ் இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார், இதில் இது மிகப் பெரிய அவமானம் எனக்கு,
அனைத்து போட்டியாளர்களும் வீட்டிற்குள் சென்று விட்டனர் ஆனால் நான் மட்டும் இல்லை. இது எனக்கு மிகப் பெரிய அவமானம், மற்றும் மன உளைச்சல் என கூறியுள்ளார்..!
Insulted again
— Suresh Chakravarthy (@susrisu) January 13, 2021