சுரேஷ் சக்ரவர்த்தியை கண்டுகொள்ளாத பிக் பாஸ் குழு.! அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் வீட்டிற்குள் வந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி எங்கே.!? உண்மை இது தானாம்.!!
பிக் பாஸ் வீட்டில் இது பைனல் வாரம் என்பதால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்துள்ளனர். அனிதாவின் தந்தை அவர்கள் இறந்ததால் அனிதாவால் கலந்து கொள்ள முடியவில்லை, ஆனால் மற்றைய அனைத்து போட்டியாளர்களும் வீட்டிற்குள் மறுபடி வந்துள்ளனர். போட்டிகள், விளையாட்டுகள், என பிக் பாஸ் குடும்பமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த நேரத்தில் ஆரி ரியோ மோதலும் உள்ளது.
சம்யுக்தா, சனம், ஆஜித், என வீடு களை கட்டும் நேரத்தில் ஏன் சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிற்குள் வரவில்லை என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. பிக் பாஸ் வீட்டில் பைனல் வரை வருவார் என் ரசிகர்கள் எதிர்பார்த்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி, இளைஞர்களுக்கு நிகராக போட்டி போட்டு டாஸ்குகளில் கலக்கிய சுரேஷ், வெளியேற்றப் பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அந்த வாரம் மிகக் குறைவான வாக்குகள் அனைத்து unofficial பக்கங்களிலும் பெற்றிருந்தவர் சனம் ஷெட்டி தான். சனம் வெளியேறுவார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் திடீரென சுரேஷ் வெளியேற்றப் பட்டார். வெளியேறியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர் பார்த்தனர் ஆனால் அதிலும் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் ஏன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கேட்கப் பட்டது, இதற்கு தொலைகாட்சியில் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை, சக போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்ற பின் தான் ஏன் என்னை அழைக்கவில்லை என்ற கேள்வியே எழுந்தது என கூறியதுடன் மதிக்காவிட்டால் அங்கு செல்வது மரியாதை அற்ற செயல் என கூறியுள்ளார்.!!