தனது நிர்வாண புகைப்படங்களை இளைஞர்களுக்கு அனுப்பி 23 வயது பெண் செய்த செயல்.!! இந்தியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!
இந்தியாவில் நிர்வாண புகைப்படங்களை காட்டி இளைஞர்களிடம் பணம் பறித்த பெண்ணை பொலீஸார் தேடி வருகின்றனர். கேரளாவில் இளைஞர் ஒருவர் பொலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். 26 வயதான சுரேஷ் என்கிற குறித்த இளைஞன் 23 வயது பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் அளித்துள்ள புகாரில் பேஸ்புக் மூலமாக இளம் பெண் ஒருவர் அறிமுகமானார். முதலில் நண்பர்களாக பழகினோம், பின் காதலானது. காதலர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். சந்திப்பின் போது தனது கஷ்டம், குடும்ப சூழல் என சோகமாக பேசுவதால் அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன்.
அது மட்டும் இன்றி அடிக்கடி அவரது நிர்வாண புகைப்படங்களை அனுப்புவார். காதல் மிகுதியால் அவரை அதிகம் நம்பினேன். ஒரு பெண் நிர்வாண புகைப்படம் அனுப்புகிறாள் என்றால் அந்த ஆணை எந்த அளவுக்கு நம்புகிறாள் என மனதால் நினைத்து அவள் மீது அதிக அன்பு செலுத்தினேன். இதன் போது பணம் நகை என வாங்கி கொடுத்தேன்.
இந்த நிலையில் திடீர் என வேலை விடயமாக நண்பர்களுடன் சென்ற போது என் போனில் சார்ஜ் முடிந்துவிட்டது. அதனால் எங்களுடன் இருந்த நண்பன் ஒருவரின் போனில் காதலியாக நினைத்தவளுக்கு கால் செய்தேன். போனில் ஐட்டம் என இருந்தது. அதிர்ந்து போனேன். போனை ஆன்சர் செய்த அவர் என் நண்பனின் பேரை சொல்லி ஏன் கால் செய்கிறாய் என திட்டினார்.
உடனே நான் போனை கட் செய்துவிட்டு நண்பனிடம் இது யார் என கேட்டேன். அதற்கு நண்பனோ காதலிப்பது போல் நடித்து பணம் சம்பாதித்த பெண். இவளின் நிர்வாண போட்டோக்கள் இருக்கிறது என்றதுடன் மனமுடைந்து போனேன் ஊருக்கு வந்ததும் சந்திக்க வேண்டும் என்று கூறியதுடன் நண்பரின் போனில் இருந்து கால் செய்ததையும் கூறினேன்.
அவ்வளவு தான். போன் ஸ்விச் ஓப் ஆகிவிட்டது. என் அம்மாவின் நகையையும் அடகு வைத்து பணம் அனுப்பினேன், எனக்கு என் பணத்தை வாங்கி கொடுங்கள். என் நண்பன் சிறிய தொகையை இழந்துள்ளான். நான் அதிகமாய் இழந்துவிட்டேன். தயவு செய்து என் பணத்தை வாங்கி கொடுங்கள் என புகாரளித்துள்ளார். குறித்த பெண் தலைமறைவாகி உள்ளதால் பொலீஸார் தேடி வருகின்றனர்.!!