பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் தாத்தா வெளியேற்றம்.? காரணம் இதுவா.?
பிக் பாஸ் வீட்டில் இன்று சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இன்று சண்டை சற்று பெரிதானதை தொடர்ந்து சுரேஷுடன் பிக் பாஸ் பேசிய போது எதேச்சையாக சுரேஷ் இதனை செய்ததாகவும், வேண்டும் என்று செய்யவில்லை எனவும் கூறியதுடன், தான் செய்த செயல் மிகவும் தவறானது என சுரேஷ் சக்ரவர்த்தி கூறினார்.
இந்த பிரச்சனையை ரசிகர்கள் பெரிதாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் சிலர் சுரேஷுக்கு ஆதரவாகவும், சிலர் சனம் ஷெட்டிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்து சுரேஷ் சனம் ஷெட்டியுடன் ஏட்டிக்கு போட்டியாகவே இருந்த நிலையில், ஏற்கனவே விழுந்து தலை மற்றும் இடுப்பு உடைத்து சத்திர சிகிச்சைக்கு பின் மறுவாழ்வு பெற்று வாழும் சனத்திற்கு சுரேஷ் அடித்தது தவறாகும்.
இதனால் வாக்குகளின் அடிப்படையில் முன்னிலையில் இருந்த சுரேஷ் திடீரென சரிவு கண்டுள்ளார். சுரேஷ், ஆரி, அனிதா, ஆஜித், பாலாஜி ஆகியோர் இருந்தாலும் இது வரை இறுதி இடத்தில் இருந்த ஆஜித் மற்றும் அனிதா திடீரென முன்னேற முதல் இடத்தில் இருந்த சுரேஷ் இறுதிக்கு வந்துள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது இம்முறை சுரேஷ் வெளியேற்றப் படுவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.
அது மட்டும் இன்றி சுரேஷ் அவர்களை வெளியேற்றப் போட பட்ட திட்டமா சனம் செட்டி மீதான தாக்குதல் என தெரியாமல் உள்ளது. கடந்து வந்த வாழ்க்கையில் சனம் தனக்கு நடந்த விபத்து பற்றி கூறி இருந்தும் சுரேஷ் ஏன் அப்படி நடந்துகொண்டார்.,?
இது ஒரு பக்கம் இருக்க சுரேஷ் வெளியேற்றப் படுவது உறுதி என்றும், பாடகி சுசித்ராவை வீட்டிற்குள் எடுப்பதற்காக சுரேஷை வெளியேற்றுகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுரேஷ் அவர்களின் வெளியேற்றத்தின் பின் சுசித்ரா வருவாராம். பொறுத்திருந்து பார்ப்போம் யார் வாராங்க யார் போறாங்க என்று..!