சுஜித்தை மீட்பதில் எடுத்த இறுதி முயற்சியும் தோல்வி..! குழந்தையை மீட்போம் உறுதியுடன் போராடும் மீட்புக் குழு..!!
திருச்சி மணற்பறை பகுதியில் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் தவறுதலாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. நேற்று 5.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. குழந்தை விழுந்து 20 அடி ஆழத்தில் சிக்கி நின்ற போது மீட்பு படையினர் உடனடியாக செயற்பட்டு குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால் மூன்று முறை செய்த முயற்சியும் தோல்வி அடைய குழந்தை 70 அடியை தாண்டி கீழே சென்றது.
இதனால் தமிழ்நாடு, பேரிடர் மீட்பு குழு உட்பட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் 6 மீட்பு குழுவினர் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் இறங்கிவிட்டனர்கள். ஆனால் நேற்று ஆரம்பித்த மீட்பு பணி 28 மணி நேரங்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இவர்களுடன் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவினரும் இணைந்து குழந்தையை மீட்க முயற்சி செய்தனர்.
அதாவது குட்டி ரோபோட் ஒன்றினை ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பி குழந்தையின் கைகளை கட்டி மேலே எடுக்க முயன்றனர் ஆனால் முக்கால் வாசி முயற்சி வெற்றி பெற்ற நிலையில் இறுதி முயற்சியும் தோல்வியடந்துள்ளது. அடுத்த் திட்டம் தற்போது தயாராகி உள்ளது.
அதாவது குழந்தை விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே இன்னுமொரு கிணறு தோன்றி அதில் தீயணைப்பு படை வீரர்கள் இறங்கி அதன் பின் குழந்தையை மீட்பது… தற்போது இருக்கும் ஒரே வழி அது தான். இந்த நிலையில் குழந்தையை எப்படியும் உயிரோடு மீட்போம் என மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர் தயவு செய்து மீட்டுத் தாருங்கல் என ஒட்டுமொத்த மக்களும் கெஞ்சுகின்றனர்.
நாடு முழுதும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் பிராத்தனை நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் எடுத்து வைத்த ஆடைகள் தயார் செய்த பலகாரங்கள் எல்லாம் இருக்க எதுவும் வேண்டாம் சுஜித் வந்தால் மட்டுமே தீபாவளி என காத்திருக்கின்றனர். தயவு செய்து மீட்டுவிடுங்கள். நாளை விடியும் போது சுஜித்தின் மறு பிறப்பு தான் தீபாவளி என கொண்டாடட்டும்..!!