குழந்தை சுஜித்தின் மரணத்தில் சந்தேகம்.. மணப்பாறை பொலீஸில் பரபரப்பு புகார்..! அதிர்ந்த பெற்றோர்… புகார் கொடுத்தது இவர் தான்..!!
குழந்தை சுஜித்தின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய விடயமாகும். எப்படியாவது குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என அனைவரும் பிராத்தனை செய்த போதும் குழந்தை இறந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது. இதனால் ஆபத்தை உணர்ந்து செயற்படுமாறு மக்களுக்கு தெரிவித்தபடி உள்ளனர்.
இந்த நிலையில் சுஜித்தின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மணற்பாறை பொலீஸில் பரபரப்பு புகார் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது. குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது வெறும் 10 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின் 26 அடி சென்றது, அதன் பின் 88 அடி வரை சென்றது. 81 மணி நேர முயற்சியின் பின் வருவாய் நிர்வாக அதிகாரி ஆணையர் ராதாகிருஷ்ணன் குழந்தை இறந்துவிட்டதாக நள்ளிரவு அறிவித்தார்.
இந்த மரணம் முற்றிலும் சந்தேகமாக இருக்கிறது? குழந்தை எப்படி விழுந்தது? எடுப்பதற்கு ஏன் தாமதமானது? குழந்தையின் மரணத்தில் முற்றிலும் சந்தேகம் மட்டுமே உள்ளதென வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி பொலீஸில் புகார் செய்துள்ளார். புகாரில் பீவி… குழந்தையை யாரிடமும் ஏன் காட்டவில்லை.!?
உண்மையில் குழந்தையின் மரணத்தில் ஏன் இத்தனை மர்மங்கள்.!? நிஜத்தில் என்ன நடந்தது.? இது பற்றிய முழுமையான தகவலை பொலீஸார் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் முத்துக்குமார் அவரது தலைமையில் விஷேட குழு ஒன்றை அமைத்து விசாரணையை ஆரம்பிக்கவுள்ளார்..!!