பொது இடங்களில் பிரபல நடிக நடிகைகளால் அவமானப் படுத்தப் பட்ட சுஷாந்த்..எப்படி எல்லாம் அவமானப் பட்டுள்ளார் இந்த வீடியோக்களை பாருங்கள்..!!
எத்தனையோ பிரபல நடிக நடிகைகள் மரணித்தும் இரண்டு மூன்று நாட்களில் கடந்து சென்ற ரசிகர்கள் ஒரு சில திரைப்படங்கள், சில சீரியல்கள் மட்டுமே நடித்த ஒரு நடிகனை தூக்கி வைத்து கொண்டாடுவது ஏன்? அவர் அப்படி என்ன சாதித்து விட்டார் என பலரும் கேட்டு வரும் நிலையில்..சாதாரண குடும்பத்தில் அதாவது சினிமா தொடர்பே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அத்தனை ரசிகர்களை இன்று அழ வைத்திருக்கிறார் என்றால் அவரது போராட்டம் சாதாரண ஒன்றல்ல.
சீரியலில் அறிமுகமான சுஷாந்த் சிங் சினிமாவில் சினிமா பிரபலங்களாலும் சந்திந்த பல அவமானங்களே இன்று இத்தனை ரசிகர்கள் கண்ணீர் சிந்தக் காரணம். சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்து சாதிக்க ஆரம்பித்த போதே அவர் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் அவமானப் படுத்தப் பட்டார்.
தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த சினிமாவும் கொண்டாடி கொண்டிருந்த போது ஆலியா பட் “காபி வித் கரண் ” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் போது ரன்வீர், வருண், சுஷாந்த் இதில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என கரண் கேட்ட போது என்ன சுஷாந்த் என்று ஒரு நடிகர் இருக்கிறாரா எனக்கு தெரியாது என கூறியுள்ளார்,
ஒட்டுமொத்த சினிமாவும் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுஷாந்த் ஆலியா பட்க்கு கேலியானார். அதே போல் சோனம் கபூர், சோனாக்ஷி, சாரா, கரீனா கபூர், போன்றோர் பொது இடத்தில் சுஷாந்தை அவமான படுத்தினார்கள். திறமையும் அழகும் என இருந்தாலும் வரிசு நடிகர் இல்லையே அதனால் karan johar, ஷாருக்கான் போன்றோராலும் சுஷாந்த் அவமான படுத்தப் பட்டார்.
சல்மான் கான் உட்பட பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் சுஷாந்தை ஓரங்கட்டி வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர். இப்படி அடிக்கு மேல் அடி பட்டாலும் ஊசி பாசி பலூன் விற்பவர்கள் தொடக்கம் தெருவில் திரியும் நாய்கள் வரை சொல்லும் சுஷாந்தின் அன்பை. பிரபலங்கள் தவிர சாதாரண மக்களில் ஒருவர் கூட சுஷாந்தை வெறுக்கவில்லை. மரணித்த பின்பும் சுசாந்த் கொண்டாடப் படுவதற்கு இதுவே காரணம்..!!