செயற்கை கால் பூட்டியிருந்த சுதா சந்திரனுக்கு விமான நிலையில் நடந்த கொடுமை.! கண்ணீருடன் அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து சோகத்தில் ரசிகர்கள்.!!
பாரத நாட்டிய கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரனிடம் மத்திய பாதுகாப்பு படை மன்னிப்பு கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவு மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. சுதா சந்திரன் சில வருடங்களுக்கு முன்பு மிகப் பெரிய விபத்து ஒன்றில் சிக்கி உயிர் ஆபத்து வரை சென்று பின்னர் தப்பியவர். சில வருடங்கள் கட்டில விட்டு இறங்க முடியாத நிலையில் இருந்தவர்.
விபத்தின் காரணமாக சுதா சந்திரனுக்கு செயற்கை மூட்டு கால். பொருத்தப் பட்டிருப்பது அனைவரும் அறிந்தது. இவரது செயற்கை மூட்டு காலால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்.குறிப்பாக வெளி நாட்டு பயணங்களின் போது சுதா சந்திரன் பல தொல்லைகளை விமான நிலையத்தில் அனுபவித்து வருகின்றார்.
அண்மையில் விமான நிலையத்திற்கு சென்ற சுதா சந்திரன் வழமை போல் தனது செயற்கை காலுக்கு செய்யும் ஈடிடி டிடக்டர் சோதனை( வெடிகுண்டு) பரிசோதனை செய்யும் படி கூறியுள்ளார். பொதுவாக மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த பரிசோதனை செய்வது வழக்கமாகும்.
ஆனால் சம்பவ தினத்தன்று அங்கிருந்த சில பெண் அதிகாரிகள் செயற்கை மூட்டு பொருத்தப் பட்டிருந்தால் அதனை வெளியே எடுத்து காட்டச் சொல்லி கட்டாயப் படுத்தியதுடன் மிக மோசமாக நடந்துகொண்டனர். தயவு செய்து இது போன்ற செயல்களை தடுக்கவும், சரியான தீர்வு எடுக்க வேண்டும் என பிரதமருக்கு தெரிவித்திருந்த நிலையில்,
நடந்த சம்பவங்களுக்கு மத்திய பாதுகாப்பு படை நடிகை சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.!