” சுஷாந்தின் மரணத்திற்கு நானும் காரணமாகி விட்டேன்.” நடி சுஷாந்தின் சகோதரி சுவேதா பேட்டி..! சோகத்தில் ரசிகர்கள்..!
கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட விடயம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ள நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை செய்து தற்கொலை போல் மாற்றியுள்ளனரா என்ற ரீதியில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் சுசாந்தின் காதலி ரியா உட்பட வீட்டில் பணி புரியும் பணியாளர்கள், மற்றும் கார் ட்ரைவர் என 19 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் சுஷாந்த் தற்கொலை செய்த வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்ட 5 டயரிகளிலும் சில விடயங்களை சுசாந்த் எழுதி வைத்துள்ளதாக பொலீஸ் தரப்பில் தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சுஷாந்தின் மரணத்திற்கு முழுமையான் காரணம் மன அழுத்தம் என்பதாக அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின் நீக்கி உள்ளார்.
4 சகோதரிகளுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளையாக வலம் வந்த சுஷாந்தின் மரணத்தை அவர்களின் சகோதரிகளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில் சுவேதா இதனை பகிர்ந்துள்ளார். “நீ அதிக வேதனையில் இருந்தாய், அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாத நிலை, நீ திறமையானவன், உன் திறமையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டனர், உனக்கு வலி கொடுத்தனர்,
அதை நான் ஏற்றுக்கொள்ள முடியாதவளாகிவிட்டேன், என்னை மன்னித்து விடு உன் மரணத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன், உன் வலிகளை பகிர்ந்து கொண்டு உனக்கு நாம் ஆறுதலாக இருந்து இருந்தால் நீ உயிருடன் இருந்து இருப்பாய் என தெரிவித்துள்ளார். அதன் பின் தனது சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் டிலிட் செய்துள்ளார்.. இந்த நிலையில் மரணம் தற்கொலையாக தான் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்..!!