வைத்தியசாலையில் வேலை செய்த தாதியையும் விட்டு வைக்காத டாக்டர் சியாப்தீன்..! குவியும் புகார்கள்..!
8000 பெண்களுக்கு சிசேரியன் உட்பட கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறப்படும் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி மீது புகார்கள் குவிந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குருனாகலை வைத்தியசாலையில் பணி புரியும் ஆர் ஏ மதுமாலினி என்ற தாதி ஒருவரும் புகார் அளித்துள்ளார்.
2018ம் ஆண்டு மார்ச் 6ம் திகதி சியாப்தீன் மொஹமட் டாக்டரால் எனக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்தது. சத்திர சிகிச்சையின் பின் என்னால் முடியாமல் போனது. அடி வயிறு வலி, கால் வீக்கம் போன்றவை தொடர்ந்தது. ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் எடுத்துவிட்டேன் குழந்தை பிறந்து 1 வருடம் ஆகியும் இன்னும் அடி வயிறு வலி நிக்கவில்லை.
மருத்துவ துறையில் இருப்பதால் இந்த வலி எனக்கு நடந்த சிசேரியனுக்கு பின் என்பதை அறிந்துகொண்டேன்..இது போன்ற சங்கடம் யாருக்கும் இனி வரகூடாது என வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இன்றி 2018 ஆண்டு இது போல் பல விடயங்கள் நடந்துள்ளது.
அது மட்டும் இன்றி இந்த வருடம் ஏப்ரல் 10ம் திகதி குழந்தை பெற்றுக் கொண்ட தாயின் கட்டில் இலக்கத்தை மாற்றி வைத்ததால் குறித்த பெண்ணின் குழந்தையை வேறு ஒருவருக்கு வழங்கிய நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின் மறைக்கப் பட்ட நிலையில் குறித்த பெண்ணின் குடும்பத்தினரால்
13ம் திகதி வைத்தியர் சியாப்தீன் மொஹமட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் படி சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியும் அவர்கள் பதில் அளிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை என கூறப் படுகின்றது.
பொலீஸ் பாதுகாப்பில் இருந்து குறித்த வைத்தியர் தற்போது சி ஐ டி க்கு மாற்றப் பட்டுள்ளது குறிப்பிட தக்கது. தற்போது குருனாகலை பொலீஸில் பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுத்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது..!