26 வயது ஆசிரியையுடன் சென்ற 14 வயது மாணவன்..! தகாத உறவால் நடந்த கொடூரம்..!
இந்தியாவில் ஆசிரியருடன் மாயமான சிறுவன் தொடர்பான தகவல் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. குஜராத்தில் காந்தி நகர் உதயோக் பவன் அரச அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் தந்தை ஒருவர் பள்ளியில் படித்து வரும் தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பொலீஸார் விசாரணையை ஆரம்பித்த போது தெரிய வந்த விடயங்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை செல்வதாக சென்றுள்ளான். பின் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பாடசாலையில் விசாரணை செய்த போது சிறுவன் பாடசாலை வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த மாணவனுடன் பாடசாலையில் அன்பாக பழகும் 26 வயது ஆசிரியையும் வெள்ளிக்கிழமையில் இருந்து பாடசாலை வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்த போது ஆசிரியரும் மாணவரும் ஒன்றாக சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் தகாத உறவின் காரணமாக சென்றது தெரியவந்துள்ளது.
சிறுவன் விரும்பி ஆசிரியருடன் சென்றிருந்தாலும் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலீஸார் இருவரையும் தேடி வருகின்றனர். இது தொடர்பாக பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கையில் ஆசிரியை குறித்த சிறுவன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டதுடன் மேலதிக வகுப்புகளும் வைத்தார்.நாம் ஆசிரியர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம் என கூறியுள்ளனர்..!!