இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது..!!
கடந்த ஆண்டுகளிலே 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது போன்ற நிலையில் இந்தியாவில் இந்த வருடமே 5G கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொழிநுட்ப உலகில் தலை சிறந்த மிகப்பெரிய ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவில் 5G கைப்பேசி விற்பனை எப்படி சிறப்பாக அமையும் என CyberMedia Research (CMR) நிறுவனம் ஆய்வு செய்துள்ளன. மேலும் இந்த நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 144 மில்லியன் 5G ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனை செய்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 மில்லியனில் ஒரு சதவீதமே 2020 ஆம் ஆண்டில் விற்பனையாகியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 5G ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை முதன் முதலாக சீனாவிலேயே ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.