புதிய மைல் கல்லை எட்டி சரித்திரம் படைத்த குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்.!
உலகளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் ஒன்றாகும். இந்த பேஸ்புக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் புதிய மைல் கல்லை எட்டி சரித்திரம் படைத்துள்ளது. அதாவது உலகளவில் சுமார் 2 பில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டு சேவை வழங்கி வருகின்றது.
இந்த தகவல் பேஸ்புக் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 1 பில்லியன் பாவனையாளர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் ஆப் அதன் பின்னர் மேலும் ஒரு பில்லியன் வரையான பாவனையாளர்களை சம்பாதித்துள்ளது.
அதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனத்தினால் 2.5 பில்லியன் பாவனையாளர்களையும், இன்ஸ்டாகிராம் 1 பில்லியன் பாவனையாளர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தரப்பட்டுள்ள என்கிரிப்ட் முறையிலான தரவுப்பரிமாற்றத்தினை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என பிரதம நிறைவேற்று அதிகாரியான Cathcart தெரிவித்துள்ளார்.