2019ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் “வாட்ஸ் அப்“ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 200 கோடியை எட்டியது.!!
உலகளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற பிரபல சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்றாகும். இது பல பில்லியன் கணக்கான பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. சிறியவர், பெரியவர் என்று எந்தவொரு வித்தியாசம் இன்றி அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மேசன்சர் செயலியான வாட்ஸ் அப் தனது பாவனையர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் வாட்ஸ் அப்“ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரபூர்வகமாக தெரிவித்துள்ளது.
அடுத்த 2014 ஆம் ஆண்டு சமூக ஊடக தளமான “வாட்ஸ் அப்” நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016ஆம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். எதிர்வரும் 2 வருடங்களில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் சமூக ஊடக தளங்களில் வாட்ஸ் அப் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பாவனையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.