இந்தியாவில் கல்வித்துறையில் முதலீடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ள பேஸ்புக் நிறுவனம்..!!
உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற சமூக வலையத்தளங்களில் பேஸ்புக் ஒன்றாகும். இந்த பேஸ்புக்கு முன்னணியில் உள்ளத்துடன் பல பில்லியன் கணக்கான பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் கல்வித்துறையில் பேஸ்புக் முதலீடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி Unacademy எனும் திட்டத்தில் தனது முதலீட்டினை மேற்கொள்கின்றது. Unacademy எனப்படுவது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு கல்வித்துறை தொழில்நுட்ப நிறுவனமாகும். அதற்கு சுமார் 110 மில்லியன் டொலர்கள ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் இரண்டாவது முதலீடாக இது விளங்குகின்றது. அதற்கு இடையில் கடந்த வருடம் Meesho எனும் திட்டத்தில் முதலீட்டினை மேற்கொண்டிருந்தது.