பூமியை படம் பிடிக்கக்கூடிய புதிய செயற்கைக் கோள் ஒன்றினை விண்வெளிக்கு அனுப்பவுள்ள இஸ்ரோ..!!
எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி இந்திய விண்வெளி ஆய்வு மையமானது பூமியை படம் பிடிக்கக்கூடிய புத்தம் புதிய செயற்கைக் கோள் ஒன்றை விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது. GISAT-1 என அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் இந்திய நேரப்படி காலை 5.43 மணியளவில் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து விண்ணை நோக்கிய பயணிக்கவுள்ளது.
அந்த செயற்கைக்கோளின் எடையானது 2,275 கிலோ கிராம்களாக காணப்படுவதுடன், சுமார் 4 மீற்றர்கள் விட்டம் உடையதாகவும் இருக்கின்றது. இந்த செயற்கைக்கோளில் நிகழ்நிலை (Real Time) கண்காணிப்பு வசதி காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். மேலும் இந்த செயற்கைக்கோளினை GSLV-F10 ரொக்கெட் சுமந்து செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.