Messenger Chatbot அறிமுகம் செய்த பேஸ்புக் நிறுவனம்..!!
நேற்றைய தினம் முன்னணி நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் தற்போது Messenger Chatbot இனை அறிமுகம் செய்துள்ளது. இது கொடிய கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தருவதற்கும், இது தொடர்பான போலியான தகவல்கள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சுகாதார அமைச்சு மற்றும் MyGov என்பவற்றுடன் இணைந்து இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாகவே அதிகளவு போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆகவே அவற்றை உடனடியாக தடுத்து மக்கள் மத்தியில் ஏற்படும் பீதியை குறைக்க இப் புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.