ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் 15,000 கோடி இழப்பை ஏற்படுத்திய கொரோனா..!!
உலகளவில் பிரபல்யம் அடைந்த மிகப்பெரிய ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகின்றது. எனினும் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதனை அடுத்து ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை உலக அளவில் சரிந்துள்ளது.
இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில் சுமார் 15,000 கோடி இந்திய ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது இந்தியா LockDown செய்யப்பட்டிருக்கின்றமையாகும். இதனால் கைப்பேசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்நிலைமை நீடிக்கும் என்பதால் மேலும் பல ஆயிரம் கோடிகளை ஸ்மார்ட் கைப்பேசி சந்தை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.