பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களுக்கு விடுத்த முக்கிய வேண்டுகோள்..!!
அண்மையில் நிலவி வருகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் தொடர்பான தகவல்களை சினேகபூர்வமாக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளது.
Carnegie Mellon பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்விற்காகவே குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு பேஸ்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக அமெரிக்காவிலுள்ள தனது பாவனையாளர்களுக்கு இணைப்பு ஒன்றினை பேஸ்புக்கில் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. இந்த இணைப்பில் கிளிக் செய்து கொரேனா வைரஸ் தொடர்பான கருத்துக்கணிப்பில் பங்கு கொள்ள முடியும். இதன் மூலம் ஆய்வை தொடர்வதற்கான தகவல்களை பயனர்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.