5 பில்லியன் டொலர் அபராதம் செலுத்தவுள்ள கூகுள் நிறுவனம்..!!
உலக அளவில் பிரபல்லியம் அடைந்த முன்னணி உலாவியான கூகுளின் குரோம் Incognito எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் கூகுள் குரோம் பாவனையாளர்கள் பாதுகாப்பாக இணைய உலாவலில் ஈடுபட முடியும்.
ஆனாலும் அவ்வாறான நிலையில் இணைய உலாவலில் ஈடுபட்ட பாவனையாளர்களை கூகுள் நிறுவனம் ட்ராக் செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 5 பில்லியன் டொலர்களை கூகுள் நிறுவனம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் வடக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றமே இந்த அபராதத்தினை விதிததுள்ளது.