டிக்டாக் ஆப்க்கு எதிராக களமிறங்கிய சிங்காரி ஆப்..! மகிழ்ச்சியில் பாவனையாளர்கள் !
உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்துள்ள முன்னணி டிக்டாக் ஆப் ஆனது கோடிக்கணக்கான மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில், நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் போன்ற அனைத்து பல பிரபலங்கள் அன்றாடம் பல வீடியோகளை பதிவேற்றி வருகின்றனர்.
மேலும் இந்த நிலையில், அதற்குப் போட்டியாக பெங்களூர் புரோகிராமர்ஸ் சிங்காரி என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியை பெங்களூரை சேர்ந்த பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதமின் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். அதில் வீடியோ பதிவிறக்கம் பதிவேற்றம் செய்துடன் நண்பர்களுக்கு மெசேஸ், சாட்டிங் செய்யவும் வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.