இரண்டு தொடு திரைகளைக் கொண்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்த மைக்ரோசொப்ட் நிறுவனம்…!!!
உலகளாவிய ரீதியில் சாம்சங் நிறுவனத்திற்கு நிகராக மைக்ரோசொப்ட் நிறுவனம் விளங்குகின்றது. மைக்ரோசொப்ட் நிறுவனம் விதம் விதமான பல மொபைல் போன்களை அறிமுகம் செய்து அதிகளவான பாவனையாளர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் அண்மையில் இந்த மைக்ரோசொப்ட் நிறுவனம் புத்தகத்தைப் போல் திறக்கக்கூடிய இரண்டு தொடு திரைகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் லேப்டொப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கக்கூடிய இரண்டு திரைகளை (two-screens) கொண்ட சர்ஃபேஸ் டுயோ ஸ்மார்ட்போன் (surface duo smartphone) அறிமுகம் செய்துள்ளது.
மிகவும் மெல்லிய வடிவில் 5.6 இன்ச் திரைகளைக் கொண்ட இதனை ஸ்மார்ட்போனாக வகைப்படுத்த முடியாது என்றும், இது முற்றிலும் புதிய வகை சாதனம் என்றும் மைக்ரோசொப்ட் கூறியுள்ளார். மைக்ரோசொப்ட் சர்ஃபேஸ் 3 லேப்டொப் மற்றும் சர்ஃபேஸ் 7 ப்ரோ டேப்லெட் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்பட்டது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து சாதனங்களும் எதிர்வரும் வருடம் சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.