Samsung Galaxy Fold கைப்பேசியினை அறிமுகம் செய்த சாம்சுங் நிறுவனம்…!!
உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற சாம்சுங் நிறுவனம். இது அதிகளவான பாவனையாளர்களை கொண்டுள்ளது. தொழிநுட்பத்தில் இந்த நிறுவனத்தை அடிச்சுக்க ஆளே இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்கு பிரபல்யம் அடைந்து வருகின்றது.
இந்த சாம்சுங் நிறுவனமானது சில தினங்களுக்கு முன்னர் மடிக்கக்கூடிய Samsung Galaxy Fold கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைபேசிகள் முதல் முதலில் தென்கொரியாவில் அறிமுகம் செய்திருந்த நிலையில் அதனை தொடர்ந்து அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இம் மாத இறுதிக்குள் மேலும் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் ஜப்பான், போலந்து, மெக்ஸிக்கோ மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும் இந்த தகவலின்படி ஜப்பானில் எதிர்வரும் 25 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் ஏனை 3 நாடுகளிலும் அறிமுகம் செய்யும் திகதி வெளியிடப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.